Pages

Monday 24 December 2012

ரவை உப்புமா

தேவையான பொருள்கள்:
பம்பாய் ரவை – 1 கப்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 5
இஞ்சி – சிறிது
எண்ணை – 3 டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 அல்லது 2 1/4 கப்
மல்லித் தழை – சிறிது
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு (விரும்பினால்), பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
  • இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் அரிந்துகொள்ளவும்.
  • 10 முந்திரிப் பருப்பை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம் என்ற வரிசையில் தாளிக்கவும்.
  • ரவையைச் சேர்த்து மேலும் 2,3 நிமிடங்கள் வறுக்கவும்.
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.
  • அடுப்பை சிம்’மில் வைத்து, வாணலியில் கொதிக்கும் தண்ணீரைச் சேர்த்து, கட்டிசேராமல் கிளறி மூடி வைக்கவும்.
  • உப்புமா வெந்து தண்ணீரில்லாமல் வற்றியதும், நெய்யை விட்டுக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • எலுமிச்சைச் சாறு கலந்து, மல்லித் தழை தூவிப் பரிமாறலாம்.

No comments:

Post a Comment