அன்னாசிப் பழத்தில் வைட்டமின் `பி' உயிர்ச்சத்து அதிகளவு உள்ளது. இது
ரத்த விருத்திக்கு மிக முக்கியமானதாகும். நன்றாகப் பழுத்த அன்னாசிப்
பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசி படாமல் உலர்த்தி
வற்றல்களாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும்
படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி
வற்றல்களை ஊறவைத்து, படுக்கச் செல்லும்போது அவற்றைச் சாப்பிட்டு வர
வேண்டும்.
இவ்வாறு 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால்
பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப் பழத்துடன்
தேன் சேர்த்து ஜுஸ் தயாரித்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒருபக்கத்
தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லாவித கண் நோய்கள், எல்லாவித காது நோய்கள்,
பல் வியாதிகள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், ஞாபகசக்திக் குறைவு
ஆகியவை குணமாகும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசிப் பழச் சாற்றைச் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள்
No comments:
Post a Comment